tamilnadu

img

அயோத்தியா சுற்றுலாத்தலமாகும் என்று ஏமாந்து விட்டோம்...

அயோத்தியா:

அயோத்தியா நகரைச் சுற்றுலாத் தலமாக்குவோம்; வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம் என்று, கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, மோடி வாக்குறுதி அளித்தார்.


ஆனால், ஆட்சிக்கு வந்தபின், எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை என்று அயோத்தியா மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.அயோத்தியாவைச் சேர்ந்த ஜங் பகதூர்என்ற விவசாயி கூறும்போது, “கடந்த 1991-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பின்போது நடந்த ரத யாத்திரையில் பங்கேற்றேன். ராமர் கோயில் கட்டுவதற்கு செங்கல்லும் அனுப்பி வைத்தேன். என் கடமையை நிறைவு செய்தேன். எல்லாமே வீணாகிப் போனது” என்று புலம்பலை வெளிப்படுத்தியுள்ளார். பாபர் மசூதி - ராமர் ஜென்ம பூமி பிரச்சனையால் சுற்றுலா பொருளாதாரமே அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டது என்றும் கூறியுள்ளார்.


பகதூரும் அவரது குடும்பத்தினர் 15 பேரும், தங்களுக்கு கழிப்பறை, வீடு, எரிவாயு, வேலைவாய்ப்புக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். சுவச் பாரத், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, உஜ்வாலா யோஜனா எதுவும் இவர்களை எட்டிப்பார்க்கவில்லை.பிரதமரின் விவசாயிகளுக்கான ரூ. 2 ஆயிரம் தவிர வேறு எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. கழிப்பறை கட்ட இன்னும் பணம் தரவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க வயல்வெளிக்குத்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் பகதூரின் மருகன் வந்தனா தேவி.


இதே குரலைத்தான் அயோத்தியா நகர பொதுமக்களும் எதிரொலித்துள்ளனர். அயோத்தியாவை ராம் நகரி என்றும் சுற்றுலாத் தளமாகவும் ஆதித்யநாத் அறிவித்தார். ஆனால், நகரம் தற்போது அசுத்தமாகவே இருக்கிறது. தெருக்களில் கால்நடைகளும், நாய்களும்தான் சுற்றித்திரிகின்றன என்று குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.


;